மீண்டும் வார இறுதி ஊரடங்கு உத்தரவு – கேரளா அரசு அறிவிப்பு!!

0
மீண்டும் வார இறுதி ஊரடங்கு உத்தரவு - கேரளா அரசு அறிவிப்பு!!
மீண்டும் வார இறுதி ஊரடங்கு உத்தரவு - கேரளா அரசு அறிவிப்பு!!
மீண்டும் வார இறுதி ஊரடங்கு உத்தரவு – கேரளா அரசு அறிவிப்பு!!

கேரளாவில் நேற்று அதிக கொரோனா அளவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு வார இருந்து ஊரடங்கை ஜூலை 17 மற்றும் 18ம் தேதிகளில் அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

வார இறுதி ஊரடங்கு:

கேரளா மாநிலத்தில் நோய் பரவல் விகிதத்தின் அடிப்படையில் அனைத்து பகுதிகளையும் மாநில அரசு பிரித்துள்ளது. நேற்று மட்டும் கேரளாவில் 14,539 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 10.46 % ஆக உள்ளது. ஏழு நாள் சராசரி பாதிப்பு விகிதத்தின் அடிப்படையில் மாவட்டங்களை வகைப்படுத்துவது தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்ட அதே வழிகாட்டுதல்களுடன் வரும் ஜூலை 17 மற்றும் 18ம் தேதிகளில் வார இறுதி ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

டிபிஆர் 5 க்குக் கீழே உள்ள பகுதிகள் ஏ பிரிவு என்றும், 5 முதல் 10 வரையிலான டிபிஆர் உள்ள பகுதிகள் பி பிரிவு என்றும், 10 முதல் 15 வரையிலான டிபிஆர் வகை சி பிரிவு என்றும், 15 க்கு மேல் டிபிஆர் உள்ள பகுதிகள் டி பிரிவு என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏ, பி மற்றும் சி வகைகளில் உள்ள கடைகள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நாட்களில் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல்கள்:

  • ‘ஏ’ பிரிவில் வார இறுதி ஊரடங்கு தவிர மற்ற நாட்களில் அனைத்து வகையான கடைகளும் வணிக நிறுவனங்களும் எல்லா நாட்களிலும் திறந்திருக்கும்.
  • அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் எல்லா நாட்களிலும் திறந்திருக்கும், அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்கும் கடைகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 8 மணி வரை ‘பி’ பிரிவில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • சி பிரிவில் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் எல்லா நாட்களிலும் திறந்திருக்கும். மற்ற கடைகள் வெள்ளிக்கிழமை மட்டுமே திறக்கப்படும்.
  • டி பிரிவில் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • ஏ, பி, சி வகை பகுதிகளில் வங்கிகள் ஒரு வாரத்தில் ஐந்து நாட்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!