நாளை (பிப்.13) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு அமல்? மாநில அரசு விளக்கம்!
கேரளா மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகளின் அதிகரிப்புக்கு மத்தியில் விதிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள அரசு, பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல மாலை வரை செயல்பட அனுமதி அளித்துள்ளது.
ஊரடங்கு நீக்கம்
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்புகள் தீவிரமடைந்து வந்த நிலையில், வார இறுதியான ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் கேரளாவில் ஜனவரி 23, 31 மற்றும் பிப்ரவரி 6 ஆகிய தேதிகளில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் நிமித்தம் மாநிலம் முழுவதும் தற்போது கொரோனா தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமான அளவு வீழ்ச்சியை கண்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் பிப்.16 வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை – ஹிஜாப் விவகாரம் எதிரொலி!
இதனை கருத்தில் கொண்ட கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை தோறும் விதிக்கப்பட்டு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை பிப்ரவரி 13 முதல் தளர்த்துவதாக தெரிவித்துள்ளது. இதனுடன் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் கொரோனா தொற்றுக்கு முந்தைய கால அட்டவணையில் செயல்பட்டது போல வழக்கமான முறையில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது கல்வி நிறுவனங்களில் இனி மாலை வரை வகுப்புகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிப்.15க்கு பிறகு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
இதற்கிடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பிந்தைய சிக்கல்களை கண்டறிந்து, சிகிச்சையளிப்பதற்கான பதிவேட்டை பராமரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை சுகாதாரத்துறை கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு, தேவையற்ற மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.