மாநிலம் முழுவதும் இரண்டு வாரம் முழு ஊரடங்கு – மருத்துவர்கள் பரிந்துரை!!
கேரளா மாநிலத்தில் கொரோனா தாக்கம் சற்று ஏற்றத்தை சந்தித்து வருகிறது. அதன் காரணமாக மாநிலம் முழுவதும் இரண்டு வார பொது முடக்கத்தை அறிவிக்கலாம் என மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
TN Job “FB Group” Join Now
பொது முடக்கம்:
இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்படுகிறது. அது தவிர பலி எண்ணிக்கையும் 2 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்திலும், கேரளா இரண்டாம் இடத்திலும் உள்ளது. அம்மாநிலங்களில் கொரோனா தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் மேலாக பதிவு செய்யப்படுகிறது.
தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு தினசரி தேர்வுகள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
கேரளாவில் இதுவரை 15 லட்சம் பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் நோய் கட்டுப்பாட்டு நடைமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும் நோய் தாக்கம் குறையவில்லை. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் இரண்டு வார பொது முடக்கத்தை அறிவிக்கலாம் என மாநில அரசுக்கு மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. இது சார்பாக அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் அனுப்பியுள்ள மனுவில், ‘கேரளா மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஏழை குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் – மாநில முதல்வர் அறிவிப்பு!
கொரோனா என்பது மருத்துவ சிகிச்சையின் வரம்புக்கு மீறிய சவாலாக உள்ளது. மாநிலம் முழுவதும் இந்த பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை பரிசோதனை செய்யப்படும் நான்கு பேரில் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் குறைந்தபட்சம் இரு வாரங்களாவது ஊரடங்கு கட்டாயம்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக கேரளாவில் பொதுமுடக்கம் தேவையில்லை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.