பாஸ்ட்புட் பிரியர்களுக்கு செக் வைத்த கேரளா அரசு – கேட்டரிங் சேவைகளுக்கு உரிமம் கட்டாயம்!
கேரளா மாநிலத்தில் தற்போது அனைத்து வகையான கேட்டரிங் சர்வீஸ்களுக்கும் அரசு உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவிலான உணவு வகைகளுக்கு தடைகள் விதிக்க வாய்ப்புகள் உள்ளது.
கேட்டரிங் சேவை:
பாஸ்ட்புட் உணவு வகைகளை தான் அனைத்து வயதினரும் விரும்பி உண்டு வருகின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வந்தாலும், அதன் மீதான மோகம் குறைவதாக இல்லை. மேலும், வீட்டில் சமைத்து உண்பதை விட, உணவகங்களில் இருந்து வாங்கி உண்பதை பழக்கமாக்கி கொண்டுள்ளனர். ஹோட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவை சமைப்பதால் பலர் உடல்நல கோளாறால் பாதிக்கப்படுகின்றனர்.
Bank Strike: பொது மக்களே கவனம்.. இந்த நாட்களில் வங்கிகளுக்கு செல்லாதிங்க – வேலை நிறுத்தம் அறிவிப்பு!
இந்நிலையில், கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா அவர்கள், கேட்டரிங் சேவைகள் அனைத்திற்கும் அரசின் உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார். மேலும், பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் அசைவ மயோனைஸ்க்கு மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஸ்ட்புட் உணவு பிரியர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். இதுபோல் இன்னும் சில உணவுகளுக்கு தடை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.