கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – புதிய விதிமுறைகள் அமல்!

0
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - புதிய விதிமுறைகள் அமல்!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - புதிய விதிமுறைகள் அமல்!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – புதிய விதிமுறைகள் அமல்!

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளன. இதையடுத்து பல பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது இந்த மாணவர் சேர்க்கையில் புதிய விதி முறையை அமல்படுத்தியுள்ளது.

மாணவர் சேர்க்கை

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்றது.தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளன. அத்துடன் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ரயிலில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு – தமிழ் புத்தாண்டு சிறப்பு ரயில்கள்!

இதையடுத்து பல பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக மத்திய கல்வி அமைச்சகத்தின் கேந்திரிய வித்யாலயா, பள்ளிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இப்பள்ளியில் ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் உள்ளிட்டோரின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து மாணவர் சேர்க்கை நடைபெறும். இதில் மீதமுள்ள இடங்கள் மற்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

இப்பள்ளிகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் 21ம் தேதியுடன் முடிவடைந்தது. மேலும் இங்கு மாணவர்கள் சேர்க்கைக்கு பல்வேறு புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதில் குறிப்பாக 1ம் வகுப்பில் குழந்தைகளை சேர்க்க விரும்பினால் அவர்கள் 6 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இந்த நடைமுறை புதிய கல்வி கொள்கை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கேந்திரிய பள்ளிகளிலும் எம்.பிக்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்துள்ளது. இது குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!