கோலாகலமாக நடந்த கயல் சீரியல் நடிகையின் வளைகாப்பு விழா – வாழ்த்துக்களை குவித்த ரசிகர்கள்!
சின்னத்திரை நடிகர், நடிகைகள் வீட்டில் நடக்கும் விசேஷங்கள் குறித்த போட்டோகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், ஒரு பிரபல ஜோடிக்கு வளைகாப்பு விழா நடந்துள்ளது.
வளைகாப்பு விழா:
கடந்த 2021-ம் ஆண்டு பல சின்னத்திரை பிரபலங்களுக்கு திருமணம் நடந்தது. அவ்வாறு திருமணம் செய்து கொண்ட பிரபல ஜோடி தற்போது ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளனர். அதாவது, கலர்ஸ் தமிழ் சேனலில் திருமணம் சீரியலில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அபிநவ்யா மற்றும் தீபக் தம்பதியினர் வீட்டில் நேற்று ஒரு விஷேஷம் நடந்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இந்த தம்பதிக்கு காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரைக்கு ரீஎன்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா ரோஷினி – இந்த தடவை விஜய் டிவிக்கு Bye Bye!
Exams Daily Mobile App Download
கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடியினர் தொடர்ந்து பரபரப்பாக பல்வேறு சீரியல்களிலும் நடித்து வருகின்றனர். கயல் சீரியலில் நாயகியின் தங்கை வேடத்தில் அபிநவ்யா நடித்து வருகிறார். இவர் கர்ப்பமாக இருக்கும் போதும் தொடர்ந்து அந்த தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், அபிநவ்யாவிற்கு குடும்பத்தினர் நேற்று வளைகாப்பு விழாவை நடந்தியுள்ளனர். இவர்களுக்கு பல சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.