“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகும் காவ்யா அறிவுமணி – காரணம் இது தானா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் முல்லை பற்றி கடந்த சில வாரங்களாக கதை கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் முல்லையாக நடித்து வரும் காவ்யா சீரியலில் இருந்து விலக இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல மொழிகளில் வெற்றி பெற்ற கதையாகும். பொதுவாகவே குடும்ப கதைகளை மையமாக கொண்ட சீரியல்களுக்கு மவுசு அதிகம். அதிலும் இந்த சீரியலில் கூட்டு குடும்பத்தின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் சென்ற வாரங்களில் கதிர் முல்லையை பற்றியே கதை கொண்டு செல்லப்பட்டது. குடும்பத்தில் அனைவருக்கும் குழந்தை இருக்க முல்லையும் தனக்கு குழந்தை வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என மருத்துவர் சொல்கின்றனர்.
அதனால் மனம் உடைந்த முல்லை வீட்டை விட்டு வெளியேறுகிறார். பின் குடும்பத்தில் அனைவரும் சமாதானம் செய்து பல இடங்களில் கடன் வாங்கி முல்லைக்கு டிரீட்மென்ட் செய்கின்றனர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வி அடைகிறது. அதனால் முல்லை மனம் உடைந்து இருக்கிறார். குடும்பத்தினர் எப்படி சமாதானம் செய்வது என தெரியாமல் இருக்கின்றனர். இப்படி முல்லையை சுற்றியே சில வாரங்களாக கதை சென்று கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தற்போது முல்லையாக நடித்து வரும் காவ்யா சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே முல்லையாக நடித்த விஜே சித்ரா மரணம் அடைந்ததை அடுத்து இவர் முல்லையாக நடிக்க தொடங்கினார். தற்போது காவ்யாவும் சீரியலை விட்டு விலகுவதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அவருக்கு பதிலாக நடிகை ஆலியா மானசா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அதிகமாக வரும் சினிமா வாய்ப்புகள் வருவதால் தான் சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.