விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விடை பெறும் முல்லை? உண்மை நிலவரம் இதோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மக்களின் மனம் கவர்ந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வரும் நடிகை காவ்யா, அந்த சீரியலில் இருந்து விலகுவதாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
நடிகை காவ்யா
விஜய் டிவியில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் சொல்லக்கூடிய அளவுக்கு ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளது. பொதுவாக ஒரு திரைக்கதையில் ஒரு நடிகர், நடிகையை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியல்கள் மக்களிடம் வரவேற்பை பெற தவறிவிடும் சூழலில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கிட்டத்தட்ட 8 முக்கிய கதாப்பாத்திரங்களை அதுவும் 4 ஜோடிகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் டிவி சீரியல் நடிகைகள் ஒரு எபிசோடுக்கு பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. அந்த வகையில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கதிர் – முல்லை ஜோடி அதிகளவு ரசிகர்களை கொண்ட ஒரு முக்கியமான ஜோடியாக பார்க்கப்படுகிறது. பள்ளிப்படிப்பை கூட முடிக்காத நாயகனை படித்து பட்டம் பெற்ற நாயகி சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொள்கிறார். எப்போதும் சண்டையிட்டு கொள்ளும் இந்த ஜோடிக்கு இடையே நாளடைவில் காதல் மலர்கிறது. இந்த அழகான காதல் கதை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கூட்டுக்குடும்பத்துன் சேர்ந்து பயணித்து வருகிறது.
இந்த சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா கடந்த ஆண்டு மரணமடைந்த நிலையில், அவருக்கு பதிலாக சின்னத்திரை நடிகை காவ்யா முல்லை கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 100 எபிசோடுகளுக்கும் மேலாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக நடித்து வரும் காவ்யாவுக்கு தற்சமயம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே போல ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலிலும் சமீப காலமாக கதிர் – முல்லை சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
விளையாட்டை கலைக்க முயற்சி செய்யும் அபிஷேக் – “பிக் பாஸ் சீசன் 5” மூன்றாவது ப்ரோமோ!
இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் இருந்து நடிகை காவ்யா விலக இருப்பதாக சமூக வலைதளங்களில் சில செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது. அதாவது வெள்ளித்திரையில் உருவாகும் ‘ஊர்க்குருவி’ என்ற திரைப்படத்தில் காவ்யா நடிக்க இருப்பதாகவும் அதனால் சீரியலை விட்டு விலகுவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த தகவல் காவ்யா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியானது இல்லை என்றாலும், மீண்டுமாக ஒரு முல்லையை ஏற்றுக்கொள்ள ரசிகர்கள் சம்மதிக்கமாட்டார்கள் என்பதே பெரும்பாலானோரின் கணிப்பாக இருந்து வருகிறது.