“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகும் காவ்யா, இனி முல்லையாக பிரபல நடிகை – ரசிகர்கள் ஷாக்!
டாப் சீரியல்கள் வரிசையில் இடம் பிடித்த சீரியல்களில் ஒன்றாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக முல்லை கதாபாத்திரம் இருக்கிறது. முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி தற்போது சீரியலை விட்டு விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முல்லை கதாபாத்திரம்:
தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல்களில் ஒன்றாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கின்றனர். தனம் மூர்த்தி, கதிர் முல்லை, ஜீவா மீனா, கண்ணன் ஐஸ்வர்யா என பலர் கதையுடன் சேர்ந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கதிர் முல்லைக்கு குழந்தை இல்லை என்பதை பற்றியே கதை சென்று கொண்டிருக்கிறது. முல்லைக்கு குடும்பமே தியாகம் செய்து டிரீட்மென்ட் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.
கண்ணம்மாவை விட்டு விலகுவதற்காக வெண்பாவை திருமணம் செய்துகொள்ளும் பாரதி – ப்ரோமோ ரிலீஸ்!
ஆனால் அதுவும் சரியாக வரவில்லை. அதனால் குடும்பமே வருத்தத்தில் இருக்கின்றனர். முல்லைக்கு குழந்தை பிறக்குமா என்பதே இனி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அது நடக்குமா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. சீரியல் தொடக்கத்தில் முல்லையாக நடிகை விஜே சித்ரா நடித்து வந்தார். அதன் பின் அவர் இறந்த பின் நடிகை காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார். முல்லை கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்த சூழ்நிலையில் முல்லையாக நடித்து வரும் காவ்யா சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகமாக வருவதால் சீரியலை விட்டு விலக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக நடிகை ஆலியா மானசா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முல்லை கதாபாத்திரம் மீண்டும் மாற்றப்பட இருக்கும் இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.