மறைந்த விஜே சித்ரா நடிப்பில் “கவலை வேண்டாம்” சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் வருத்தம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் பிரபலமானவர் விஜே சித்ரா. அவர் இறந்து தற்போது ஒரு வருடம் ஆனாலும் அவர் நடித்து வெளிவர இருந்த “கவலை வேண்டாம்” சீரியல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
கவலை வேண்டாம்:
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளர், நடிகை என பல இடங்களில் தனது திறமையை நிரூபித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக பிரபலமானவர் நடிகை விஜே சித்ரா. இவ்வாறு கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறிய அவர் சில காரணங்களில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய இழப்பு அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் சின்னத்திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது நடக்காது என தெரிந்தும் அவர் மீண்டும் வர வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் ராஜு உடன் அடிக்கடி சண்டையிட்ட அபிநய் ? ரசிகர்களின் கேள்விக்கு பதில்!
அவர் நடித்த கால்ஸ் படம் அவரது இறப்பிற்கு பின் வெளியானது. அதில் அவருடைய ரசிகர்கள் பெரிய கட்அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினார்கள். மேலும் அவர் இறந்து ஒரு ஆண்டு ஆனாலும் மக்கள் நாயகியாக இன்னும் பலரது மனதில் வாழ்ந்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் தற்போது காவ்யா நடித்து வந்தாலும், முல்லை என்றால் அனைவரும் சித்ரா தான் ஞாபகத்திற்கு வருவார்கள்.
பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு குறும்புத்தனத்தை வெளிப்படுத்தி வந்த அவர் “கவலை வேண்டாம்” என்ற சீரியலில் நடிக்க இருந்தார். இது குறித்த ப்ரோமோ எடுக்கப்பட்ட நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது. மீண்டும் இதே போல சிரித்த முகத்தோடு சித்ரா நடிக்க வேண்டும் என அந்த ப்ரோமோ வீடியோவில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த வீடியோ சித்ரா ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.