உயிரிழந்த சௌம்யா.. மாதவன் கொலை செய்ததை அறியும் வெண்ணிலா – காற்றுக்கென்ன வேலி அப்டேட்!
விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் தற்போது ரசிகர்கள் மிகவும் பயந்த அந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது. மேலும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.
காற்றுக்கென்ன வேலி:
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகி வரும் தொடர் தான் காற்றுக்கென்ன வேலி. படித்து முன்னேற வேண்டும் என நினைக்கும் நாயகி வெண்ணிலா தடைகளை தாண்டி சாதிப்பதே இந்த சீரியலின் மையக்கதை. ப்ரைம் டைம்மில் இந்த சீரியல் ஒளிபரப்பாக விட்டாலும் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு.
Follow our Instagram for more Latest Updates
தற்போது இந்த தொடரில் வெண்ணிலாவின் அக்கா உயிருக்கு அவரின் கணவர் மாதவனால் ஆபத்து வருகிறது. சிலிண்டரை திறந்து விட்டு சௌம்யாவை கொலை செய்கிறார் சந்தோஷ். தன் அக்காவின் மரண செய்தி கேட்டு வெண்ணிலா மயங்கியே விழுந்துவிடுகிறார். மேலும் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என எண்ணி மாதவன் அழுது புலம்பி நடிக்கிறார்.
Exams Daily Mobile App Download
ஏற்கனவே வெண்ணிலாவுக்கு தன் மாமாவின் புத்தி தெரியும். கண்டிப்பாக வெண்ணிலா சந்தேகப்பட்டு இதுகுறித்து ஆராயும் பொழுது தான் மாதவன் செய்த இந்த கொலை வெட்டவெளிச்சமாகும். ஆக மொத்தம் இனி காற்றுக்கென்ன வேலி சீரியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று மட்டும் தெரிகிறது.