5 லட்சத்தை ரெடி செய்துவிட்ட கதிர், மகிழ்ச்சியில் முல்லை – புதிய திருப்பங்களுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!
வீட்டு செலவுக்கு கூட காசு இல்லாமல் தவித்தபோது கதிர் ஒரு ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேருகிறார். இந்நிலையில், கதிர் 5 லட்சத்தை ரெடி செய்துவிட்டு முல்லையிடம் கொடுக்கும் படியான அதிரடி ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீண்டும் கதிரும் முல்லையும் எப்போது குடும்பத்துடன் இணைவார்கள் என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது, முல்லைக்காக குடும்பத்தினர்கள் செலவு செய்த 5 லட்ச ரூபாய் கடனை அடைத்தால் மட்டுமே வீட்டிற்கு வருவேன் என கதிர் பிடிவாதமாய் இருக்கிறார். பின்னர், எங்கு செல்வது என்று கூட தெரியாமல் விழித்து கொண்டிருந்த சமயத்தில் முல்லையை அழைத்து கொண்டு கதிர் வாடகை வீட்டிற்கு செல்கிறார்.
Exams Daily Mobile App Download
மூர்த்தியின் கடையிலும் வேலை பார்க்க மாட்டேன் என கதிர் கூறிவிட்டார். பின்னர், எப்படி தான் 5 லட்ச ரூபாய் கடனை அடைப்பது என யோசித்து கொண்டிருக்கும் சமயத்தில் கதிர் ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேருகிறார். ஆனால், இந்த ஹோட்டலில் சாப்பிட்ட இலையை எடுப்பது போன்ற வேலையை தான் செய்து கொண்டிருப்பதால் முல்லை எப்படியும் இந்த வேலையை செய்ய ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதற்காக முல்லையிடம் இருந்து ஹோட்டலில் வேலை பார்ப்பதை மறைக்கிறார்.
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் – விரைவில் முடிவுக்கு வரும் WFH முறை?
பின்னர், அந்த ஹோட்டல் வேலை பார்க்கும் பணம் குடும்ப செலவுக்கே சரியாக இருக்கும். எப்படி 5 லட்ச ரூபாயை அடைப்பது என யோசிக்கும் போது கதிர் அந்த ஹோட்டலிலேயே தொழிலை கற்று சுயமாகவே ஒரு ஹோட்டலை துவங்க இருக்கிறார். இந்த ஹோட்டலை முல்லை மற்றும் கதிர் இருவருமே தனியாக கவனித்துக்கொள்ள இருக்கின்றனர். பின்பு, கொஞ்ச நாட்களிலேயே 5 லட்ச ரூபாயை ரெடி செய்து குடும்பத்தினரிடம் கொடுக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.