கடன் வாங்கியதை நினைத்து வருத்தப்படும் கதிர், வரப்போகும் அடுத்த பிரச்சனை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இனி வருபவை!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அப்பா முல்லையை பார்க்க வர அப்போது மீனாவிடம் பணம் சம்மந்தமாக சில விஷயங்களை பேசுகிறார். அதை எல்லாம் கதிர் மறைந்து இருந்து கேட்டுவிட யாருக்கும் பணம் கொடுப்பது பிடிக்கவில்லை என்ற உண்மை கதிருக்கு தெரிய வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சந்தோசத்திற்கு பஞ்சம் இல்லாமல் தினசரி எபிசோடுகள் சென்று கொண்டிருக்கிறது. முல்லைக்கு கடன் வாங்கி டிரீட்மென்ட் செய்தாலும் முல்லையின் சந்தோசமான முகத்தை பார்த்து குடும்பத்தில் அனைவரும் சந்தோசமாக இருக்கின்றனர். கதிர் முல்லையை கவனித்து கொள்வதை பார்த்து குடும்பத்தில் அனைவரும் ஆச்சர்யமாக இருக்கின்றனர். அவரை ஒரு அடி கூட நடக்க விடாமல் தூக்கிக் கொண்டு செல்கிறார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இன்றைய எபிசோடில் முல்லையை பார்க்க மீனாவின் அப்பா வருகிறார். அவர் முல்லையிடம் நல்லபடியாக பேச பின் முல்லை கதிர் எழுந்து உள்ளே செல்கின்றனர். அப்போது மீனாவிடம் ஜனார்த்தனன் பணம் நிறைய செலவாகி இருக்குமே எப்படி வந்தது என கேட்க அது தான் தெரியவில்லை 5 லட்சத்தை காலையில் பேசி மாலை ஏற்பாடு செய்தார்கள் என மீனா சொல்கிறார். உனக்கு பாத்ரூம் கட்ட பணம் இல்லை என இந்த குடும்பம் எவ்வளவு சண்டை போட்டது என மீனாவின் அப்பா சொல்ல அதை ஏன் கேட்கிறீர்கள் என மீனா சொல்கிறார்.
தலைநகரில் நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசின் அதிரடி முடிவு!
அவர்கள் பேசிக் கொண்டதை கதிர் கேட்டுவிட எல்லாரும் பணம் செலவு செய்ததை தவறாக நினைத்து இருக்கிறார்கள் போல என நினைத்து வருத்தப்படுகிறார். மறுபக்கம் மூர்த்தி கடன் வாங்கியவர் கடைக்கு வந்து பணம் கேட்க கதிரிடம் சொல்ல வேண்டாம் என மூர்த்தி நினைக்கிறார். ஆனால் அவர் சொல்லிவிட கதிர் அண்ணன் கடன் வாங்கி கஷ்டப்படுவதை நினைத்து வருத்தப்படுகிறார். இந்த கடன் வாங்கியதால் வீட்டில் பல பிரச்சனைகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.