மூர்த்திகாக மீண்டும் வீட்டிற்கு வர சம்மதிக்கும் கதிர் – புதிய திருப்பங்களுடன் பாண்டியர் ஸ்டோர்ஸ்!

0

மூர்த்திகாக மீண்டும் வீட்டிற்கு வர சம்மதிக்கும் கதிர் – புதிய திருப்பங்களுடன் பாண்டியர் ஸ்டோர்ஸ்!

முல்லையின் செயற்கைமுறை கருவுறுதலுக்கு செலவான ஐந்து லட்ச ரூபாயை திருப்பிக் கொடுக்கும் வரைக்கும் வீட்டுக்கு வரவே மாட்டேன் என சொல்லிவிட்டு சென்ற கதிர் தற்போது மீண்டும் வீட்டிற்கு வர சம்மதிக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்தி குணமாகி மீண்டும் வீட்டிற்கு வருவாரா எனவும், கதிரும் முல்லையும் மீண்டும் குடும்பத்தினருடன் இணைவார்களா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது கதிரும் முல்லையும் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்ததும் மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து விடுகிறது. உடனே மூர்த்தியை அழைத்துக்கொண்டு குடும்பத்தினர்கள் மருத்துவமனையில் சேர்க்கின்றனர். மூர்த்தியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மூர்த்திக்கு இதயத்தில் இரண்டு பிளாக் இருக்கிறது எனவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே மூர்த்தியை குணப்படுத்த முடியும் எனவும் கூறி விடுகின்றனர்.

UGC NET தேர்வுகளின் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு – பல்கலைக்கழக மானியக் குழு வெளியீடு!

பின்னர், மூர்த்தியின் சிகிச்சைக்கு தேவையான இரண்டு லட்ச ரூபாயை ஜனார்த்தனன் தான் கொடுக்கிறார். குடும்பம் இரண்டாகப் பிரிந்ததற்கு முக்கியமான காரணமே ஜனார்த்தனன் தான். ஆனாலும், மூர்த்தியின் உயிரை காப்பாற்றியே தீரவேண்டும் என்பதற்காக அனைத்தையும் மறந்து ஜனார்த்தனனிடம் இரண்டு லட்ச ரூபாயை வாங்கிக் கொள்கின்றனர். மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்த விஷயம் அறிந்ததுமே முல்லையும் கதிரும் மூர்த்தியை பார்க்க மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆனாலும் ஐந்து லட்ச ரூபாய் கடனை அடைக்கும் வரைக்கும் வீட்டின் வாசலை மிதிக்க மாட்டேன் எனவும் கூறுகிறார்.

பின்பு மூர்த்தி கண்விழித்ததும் குடும்பத்தினர்கள் அனைவரும் மூர்த்தியை பார்க்க செல்கின்றனர். ஆனால், கதிர் மட்டும் மூர்த்தியை பார்க்கச் உள்ளே செல்லாமல் மிகவும் தயங்கியபடி நிற்கிறார். குடும்பத்தினரும் கதிரை பற்றி மீண்டும் மூர்த்தியிடம் கூறினால் மூர்த்திக்கு ஏதாவது ஆகிவிடும் என பயப்படுகின்றனர். பின்னர் மூர்த்தியின் மருத்துவ செலவுக்கு தேவைப்பட்ட 2 லட்ச ரூபாயையும் நானே தருகிறேன் என ஜனார்த்தனனிடம் சவால் விடுகிறார். மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்ததற்கு கதிர் தான் முழுக்க முழுக்க காரணம் என குடும்பத்தினர் அனைவரும் கதிரை வெறுப்பது போல நடந்து கொள்கின்றனர். இந்நிலையில் மூர்த்தி குணமாகி மீண்டும் கதிரை வீட்டிற்கு கூட்டிச் செல்லும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!