கரூர் நகராட்சி மாநகராட்சியாக மாறுவது எப்போது? அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தின் மிகவும் பழமையான நகராட்சியான கரூர் நகராட்சி கூடிய விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக வெளியிட வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் நகராட்சி
தமிழகத்தில் கடந்த 1874 ஆம் ஆண்டு கரூர் நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டது. பின், படிப்படியாக மக்கள் தொகை உயர்வு மற்றும் வருமான உயர்வு ஆகிய காரணங்களால் 1969-ல் முதல் நிலை, 1983-ல் தேர்வுநிலை, 1988-ல் சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்படியாக இருக்க, கடந்த 2004 ஆம் ஆண்டு 30 ஆயிரத்திற்கும் அதிகமான நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இப்படியாக இருக்க, அப்போதில் இருந்து கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கைகள் எழுந்து வந்தது.
பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !
இதனை அடுத்து இந்த தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு போட்டியிட்ட செந்தில் பாலாஜி கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த உறுதி அளித்தார். பின், அடுத்தடுத்த ஆண்டுகளில் இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. ஒரு முறை அப்போதைய முதல்வராக இருந்த பழனிச்சாமி கரூர் நகராட்சிக்கு வந்த போது இது குறித்த அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது குறித்து அவர் பேசவில்லை.
TN Job “FB Group” Join Now
இப்படியாக இருக்க, இன்று மக்கள் சபைக் கூட்டத்தில் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மக்களிடையே பேசுகையில் இந்த ஆண்டே கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கபடும் என்று தெரிவித்தார். இது குறித்த அறிவிப்பு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே வெளியிடப்படும் என்றும் செய்திகள் கசிந்துள்ளன.