
கார்த்திகை தீபம் சீரியலில் திடீர் திருப்பம் – இவருக்கு பதில் இனி இவர்…என்ன காரணம்.. ரசிகர்கள் கேள்வி?
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த வந்தனா சீரியலில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேலும் மாற்றத்திற்கான காரணம் குறித்தும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகை வந்தனா:
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. அதே சேனலில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்த கார்த்திக் இந்த சீரியலில் மீண்டும் நாயகனாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஐபிஎஸ் ஆனாலும் சிவகாமியின் மருமகளாக நடந்து கொள்ளும் சந்தியா – வெளியான “ராஜா ராணி 2” ப்ரோமோ!
அதனால் கார்த்திகை தீபம் சீரியல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் சீரியலுக்கான கதைக்களமும் அமைய கார்த்திக் மீண்டும் ரசிகர்களை கவர தொடங்கியுள்ளார். இந்த சீரியலில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை வந்தனா மாற்றப்பட்டுள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
இந்த சீரியலில் கதாநாயகனின் அண்ணியாக ‘ஐஷு’ கதாபாத்திரத்தில் நடித்து வந்த வந்தனா ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் அறிமுகமானார். தொடர்ந்து. வில்லி கேரக்டரில் நடித்திருந்தாலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளார். இவருக்கு பதிலாக சுபரக்ஷானா என்பவர் நடித்து வருகிறார்.
Exams Daily Mobile App Download