‘கார்த்திக் கிருஷ்ணா தான் என்னுடைய அப்பா’ – உண்மையை போட்டுடைக்கும் சத்யா! அதிர்ச்சியில் வருண்!

0
'கார்த்திக் கிருஷ்ணா தான் என்னுடைய அப்பா' - உண்மையை போட்டுடைக்கும் சத்யா! அதிர்ச்சியில் வருண்!
'கார்த்திக் கிருஷ்ணா தான் என்னுடைய அப்பா' - உண்மையை போட்டுடைக்கும் சத்யா! அதிர்ச்சியில் வருண்!
‘கார்த்திக் கிருஷ்ணா தான் என்னுடைய அப்பா’ – உண்மையை போட்டுடைக்கும் சத்யா! அதிர்ச்சியில் வருண்!

‘மௌன ராகம் 2’ சீரியலில் இத்தனை நாட்களாக கார்த்திக் கிருஷ்ணா தான் தன்னுடைய அப்பா என்றும், மல்லிகா என்பவர் தான் தன்னுடைய அம்மா என்பதையும் சத்யா மறைத்து கொண்டிருந்தார். இந்நிலையில் தற்போது கார்த்திக் கிருஷ்ணா தான் என்னுடைய அப்பா என அனைவரிடமும் சத்யா கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

மௌன ராகம் சீசன் 2:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மௌனராகம் சீசன் 2 தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது கார்த்திக் கிருஷ்ணா மற்றும் மல்லிகாவிற்கு பிறந்த குழந்தை தான் சக்தி. ஆனால் கார்த்திக் கிருஷ்ணாவுக்கு காதாம்பரி என்கிற இன்னொரு மனைவியும் இருக்கிறார். அவருக்கு பிறந்த குழந்தை தான் ஸ்ருதி. காதாம்பரி மற்றும் ஸ்ருதியின் வாழ்க்கைக்காக தான் மல்லிகாவும், சக்தியும் சென்னையை விட்டு காலி செய்து வேறு ஒரு ஊருக்கு சென்றனர்.

Exams Daily Mobile App Download

ஆனால் கார்த்திக் கிருஷ்ணா உண்மையாக காதலித்து வந்த மல்லிகாவை தேடி பல ஆண்டுகள் அலைந்தார். ஆனால் மல்லிகாவும் சக்தியும் கார்த்திக் கிருஷ்ணாவின் கண்ணில் படாமல் வாழ்ந்து வந்தனர். தற்போது மல்லிகாவின் சிகிச்சைக்காக மட்டுமே சென்னைக்கு வந்தனர். அப்போது கார்த்திக் கிருஷ்ணாவின் இசைக் கல்லூரியில் சத்யா வேலைக்கு சேருகிறார். பின்பு சத்யா கார்த்திக் கிருஷ்ணாவை எதிரியாக நினைப்பவர் வீட்டிற்கு மருமகளாக செல்கிறார். சத்யாவின் திருமணத்திற்குக் கூட கார்த்திக் கிருஷ்ணா வரவே கூடாது என்று தான் குடும்பத்தார்கள் கூறியிருந்தார்கள். பின்பு எப்படியோ தன்னுடைய மகளின் திருமணத்தை பார்த்தே தீர வேண்டும் என கார்த்திக் கிருஷ்ணா அந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.

ஷபானா தான் எனக்கு எல்லாமே, எனக்கு மனைவியாக கிடைத்ததெல்லாம் வரம் – ஆர்யன் வெளியிட்ட பதிவு!

தற்போது அதே வீட்டிற்கு தான் ஸ்ருதியும் திருமணம் செய்து கொண்டு மருமகள் ஆகிவிட்டார். சத்யா தான் கார்த்திக் கிருஷ்ணாவின் மகள் என்கிற விஷயம் குடும்பத்தாருக்கு தெரியாது. தற்போது சத்யா நான் தான் கார்த்திக்கின் மகள் என்று குடும்பத்தினரிடம் கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதற்குப் பிறகு தன்னுடைய எதிரியான கார்த்திக் கிருஷ்ணாவின் மகளை குடும்பத்தார்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம் தான். எனவே அடுத்து நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!