ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

0
ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!!
ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!!
ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஏப்ரல் 10 முதல் 20 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை தாக்கம்:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு, அந்தந்த சூழ்நிலைகளை பொறுத்து மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என தெரிவித்துள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தாக்கம் வேகமெடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6,570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,40,130 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலத்தில் 53,395 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் கொரோனாவால் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ளூர் விடுமறை ரத்து – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

எனவே மாநில அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 8 இடங்களில் ஏப்ரல் 10 முதல் 20 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அதே சமயத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!