6 முதல் 8ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறப்பு – மாநில அரசு நடவடிக்கை!
கர்நாடகா மாவட்டத்தில் தற்போதுள்ள கொரோனா நிலையை ஆய்வு செய்த பின்னர், 2%க்கும் குறைவாக நேர்மறை விகிதம் உள்ள மாவட்டங்களில் மட்டும் 6 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு இன்று (செப்டம்பர் 6) முதல் நேரடி வகுப்புகளை துவங்க அரசு அனுமதி கொடுத்துள்ளது.
வகுப்புகள் துவக்கம்
நாடு முழுவதும் தற்போது கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வந்துள்ளதையடுத்து பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்திலும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 2% க்கும் குறைவான கொரோனா நேர்மறை விகிதம் உள்ள மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளை மீண்டும் திறக்க கர்நாடக அரசு அனுமதி கொடுத்தது. அந்த வகையில் முகக்கவசங்களை அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நெறிமுறைகளுடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
இதையடுத்து பள்ளிகளை திறப்பதில் 2 ஆம் கட்ட நடவடிக்கையாக இன்று (செப்டம்பர் 6) முதல் 6 லிருந்து 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கொரோனா நேர்மறை விகிதம் 2%க்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தவிர பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அரசு கட்டாயமாக்கவில்லை. அந்த வகையில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள 3.8 மில்லியன் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
முடிவுக்கு வரும் WFH? 2021க்குள் அலுவலகத்திற்கு அழைக்க TCS திட்டம்!
மேலும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அனைத்து பள்ளிகளின் ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், கர்நாடகா அரசின் முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றி இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.