1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி – தனியார் பள்ளிகள் எதிர்பார்ப்பு!!
கர்நாடகாவில் 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த கல்வி அமைச்சரின் முடிவை அமமாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகள் வரவேற்றுள்ளன. மேலும் 1 முதல் 5 வகுப்புகளை மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதிக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசுகள் நேரடி வகுப்புகளை தொடங்கி உள்ளன. அதன்படி கர்நாடகாவில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கும், பிப்ரவரி 1 முதல் 9ம் வகுப்பிற்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
பிப்.19ம் தேதி விழுப்புரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!!
இந்நிலையில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 22ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்து உள்ளார். மேலும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 24 அல்லது 25ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்து உள்ளார். இதற்கு தனியார் பள்ளிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக கர்நாடக தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் கூறுகையில், 1 முதல் 5 வகுப்புகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யாதது ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார். எனவே அரசு இது குறித்து ஆலோசித்து விரைவில் முடிவை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Really Ur going to re-open the school