பள்ளி, கல்லூரிகளில் நேரடி முறை தேர்வுகள் – மாநில அரசு உத்தரவு!!

0
பள்ளி, கல்லூரிகளில் நேரடி முறை தேர்வுகள் - மாநில அரசு உத்தரவு!!
பள்ளி, கல்லூரிகளில் நேரடி முறை தேர்வுகள் - மாநில அரசு உத்தரவு!!
பள்ளி, கல்லூரிகளில் நேரடி முறை தேர்வுகள் – மாநில அரசு உத்தரவு!!

கர்நாடகா மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்க வேண்டும் என்றும் தேர்வுகள் நேரடி முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா அரசு:

கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகாரித்து வரும் நிலையிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை தொடர்ந்து நடத்த கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. மேலும், தேர்வுகளையும் நேரடி முறையில் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து தேர்வுக்கு வரும் மாணவர்கள் தாங்கள் கொரோனா தொற்று பரிசோதனை செய்து அதன் முடிவுடன் தேர்வுக்கு வர வேண்டும்.

அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று – பள்ளிக்கு விடுமுறை!!

முதல்வரின் அறிவிப்பு:

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதன்படி, மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2,792 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இடைத்தேர்தல் பிரசாரத்தில் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கும், அரசியல் பேரணிகள் நடத்துவதற்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்துறை அமைச்சர்:

கர்நாடகா மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் அவர்கள் கூறுகையில், “மாநிலத்தில் இறுதித் தேர்வுகளை நடத்துவது குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். தற்போதைக்கு முன்னர் அறிவித்த தேர்வு நாட்காட்டியின் படியே செயல்பட முடிவு செய்துள்ளோம். இருப்பினும், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தி தேர்வுகளை நடத்துவது குறித்த இறுதி முடிவுகளை எடுக்க உள்ளோம்” என்று கூறினார்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!