ஜூன் 21 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – கர்நாடக அரசு அறிவிப்பு!!
கர்நாடக மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பு கல்வியாண்டில் ஜூன் 21 முதல் ஜூலை 5, 2021 வரை நடைபெறும் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பொதுத்தேர்வு அட்டவணை:
கல்வித்துறை அமைச்சர் கூறுகையில், எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் ஜூன் 21 ஆம் தேதி தொடங்கி ஜூலை 5 வரை நடைபெறும். முக்கிய பாடங்களில் படிப்பதற்கு ஒரு நாள் இடைவெளி இருக்கும். எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்ய ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், மாநில கல்வித்துறை இந்த ஆண்டு எளிதாக வினாத்தாள்கள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
- ஜூன் 21: முதல் மொழி (கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், உருது, ஆங்கிலம், சமஸ்கிருதம்)
- ஜூன் 24: கணிதம்
- ஜூன் 28: சமூக அறிவியல்
- ஜூன் 30: மூன்றாம் மொழி (இந்தி, கன்னடம், ஆங்கிலம், அரபு, பாரசீக, உருது, சமஸ்கிருதம், கொங்கனி, துலு)
- ஜூலை 2: இரண்டாம் மொழி (ஆங்கிலம் / கன்னடம்)
- ஜூலை 5: சமூக அறிவியல்
தமிழக காவல் துறையினருக்கு விடுமுறை ரத்து – டி.ஜி.பி., அறிக்கை!!
தற்போது, அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு பள்ளியில் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கருத்தில் கொண்டு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகளை மீண்டும் திறக்கும் திட்டத்தை மாநில அரசு தற்போது ஒத்திவைத்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்