ஜூலை 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில கல்வித்துறை அறிவிப்பு!!
கர்நாடகாவில் ஜூலை 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியாக உள்ளது. மேலும் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தது. ஒவ்வொரு பள்ளிகளுக்கும் நேரடி வகுப்புகள் போலவே கால அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு மாணவர்களின் மொபைல் போன் எண்ணிற்கு அனுப்பப்பட்டன. வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வந்தது. தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இந்த வருடம் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!!
இதனால் ஊரடங்குகள் அமலில் உள்ளது. இதன் காரணமாக தொற்று பரவல் கர்நாடக மாநிலத்தில் குறைந்துள்ளது. இந்த முழு ஊரடங்கு பயன் அளித்திருப்பதாக கூறுகின்றனர். இதனால் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய கல்வி ஆண்டு வழக்கமாக கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கும் ஆனால் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. கர்நாடகாவில் இந்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் பள்ளிகள் திறக்கப்பட்டு ஜூலை 1 முதல் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
முதல் பருவ காலம் ஜூலை மாதம் 1-ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 9-ந் தேதி வரையும், 2-வது பருவ காலம் அக்டோபர் 21-ந் தேதி தொடங்கி 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரையும் நடைபெறும். 2022 ம் ஆண்டிற்கான கோடை விடுமுறை மே மாதம் 1-ந் தேதி தொடங்கி அதே மாதம் 28-ந் தேதி விடப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு, அரசு பள்ளிகள், அரசு மானியம் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் பள்ளிகளை திறந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tamilnadu Education and systems total wast