மே 12க்கு மேல் முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு !!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போதும் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் அங்கு மே 12ஆம் தேதிக்கு மேல் முழு ஊரடங்கை அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு
நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தாக்கம் எதிர்பாராத அளவு உயர்ந்து வருகிறது. மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்து வருகின்றன. அதன் அடிப்படையில் கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் இரண்டு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அம்மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக உற்பத்தி, கட்டுமானம் மற்றும் ஆடை தொழிற்சாலைகள் உட்பட பல துறைகளில் 50% ஊழியர்கள் மட்டுமே செயல்படுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. தவிர போக்குவரத்தில் 50% இயக்கத்துக்கு மட்டுமே மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை பிறப்பித்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என முதல் மந்திரி எடியூரப்பா அவர்களுக்கு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
மே 5 முதல் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கம் நிறுத்தம் – மாநில அரசு அறிவிப்பு!!
இப்படி செய்தால் ஜூன் மாத இடையில் நோய் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போதுள்ள முழு முடக்கத்தினால் இந்த வார இறுதியில் நோய் தொற்று குறைவதற்கு வாய்ப்புள்ளதாகவும், அப்படி இல்லாவிட்டால் நிபுணர்கள் அறிவுறுத்தியபடி, மே 12ஆம் தேதிக்கு பிறகு முழு முடக்கத்தை அறிவிக்கலாம் என அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
No