மே 11 வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் நேற்று இரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்கள் வாங்க 4 மணி நேரம் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமல்:
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் மிகவும் வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் கொரோனாவால் 30 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது பலனளிக்காத காரணத்தினால் நேற்று (ஏப்ரல் 27) ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு 14 நாட்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் அரசு, தனியார் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. ஆனால் சரக்கு போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பெரிய கடைகள் மூடல் – தலைமை செயலாளர் உத்தரவு!!
முழு ஊரடங்கு காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்லும் அவலமும் நடைபெற்றது. மருத்துவமனைக்கு செல்பவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்பவர்கள், விமான நிலையங்களுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? மத்திய அரசு ஆலோசனை!!
பெங்களூருவில் போலீசார் பல்வேறு முக்கிய சாலைகளை இரும்பு தடுப்புகள் வைத்து மூடியுள்ளனர். காய்கறி, பழங்கள், பால், பலசரக்கு கடைகளை காலை 6 மணிக்கு திறந்து காலை 10 மணி வரை 4 மணி நேரம் மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.