அரசு கொடுத்த டிராஃபிக் ஆஃபரால் ரூ. 5.6 கோடி அபராதம் வசூல் – கர்நாடகா அரசு அறிவிப்பு!!

0
அரசு கொடுத்த டிராஃபிக் ஆஃபரால் ரூ. 5.6 கோடி அபராதம் வசூல் - கர்நாடகா அரசு அறிவிப்பு!!
அரசு கொடுத்த டிராஃபிக் ஆஃபரால் ரூ. 5.6 கோடி அபராதம் வசூல் - கர்நாடகா அரசு அறிவிப்பு!!
அரசு கொடுத்த டிராஃபிக் ஆஃபரால் ரூ. 5.6 கோடி அபராதம் வசூல் – கர்நாடகா அரசு அறிவிப்பு!!

கர்நாடகா மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிக்காத காரணத்தால் பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை பலர் செலுத்தாமல் இருக்கும் நிலையில், அரசு ஆஃபர் ஒன்றை கொடுத்துள்ளது.

அரசு ஆஃபர்:

இந்தியாவில் ஏற்படும் விபத்துகளை தடுக்க மாநில அரசுகள் போக்குவரத்து விதிகளை கடுமையாக்கி உள்ளது. அந்த வகையில், கர்நாடகாவில் போக்குவரத்து விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த விதிகளை சரியாக கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டு சுமார் 530 கோடி ரூபாய் அரசிற்கு செலுத்த வேண்டி இருக்கிறது.

இனி மதுபான விற்பனை நிலையத்திலும் GPay – அறிவிப்பை வெளியிட்ட ஆந்திரா அரசு!!

பலர் இந்த தொகையை செலுத்தாமல் இருக்கும் நிலையில், அரசு சார்பில் புது ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, கர்நாடகாவில் நிலுவையில் உள்ள அபராத தொகையை பிப். 11 ஆம் தேதிக்குள் செலுத்தினால் 50 சதவிகிதம் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் காரணமாக பெங்களுருவில் நேற்று ஒரே நாளில் ரூ.5.6 கோடி வசூலாகி இருக்கிறது. மேலும் கட்டணம் செலுத்த https://bangaloretrafficpolice.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!