பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை – மாநில அரசு விளக்கம்!!
கர்நாடகா மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று:
நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த 2020 மார்ச் மாதத்தில் இருந்து பரவ ஆரம்பித்தது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பரவல் சற்று குறைந்து வந்தது. ஊரடங்கினால் நாட்டின் பொருளாதாரம் சற்று பாதிப்படைந்திருந்தது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!!
தாக்கம்:
ஊரடங்கினால் நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. ஊரடங்கின் காரணமாக கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வந்தது. இதனால் மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கு அனுமதியளித்தது.
இரண்டாம் அலை:
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முறையை கடைபிடிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் பல மாநிலங்களில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்