1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு இன்று முதல் முழுநேரம் பள்ளிகள் திறப்பு!!

0
1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு இன்று முதல் முழுநேரம் பள்ளிகள் திறப்பு!!
1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு இன்று முதல் முழுநேரம் பள்ளிகள் திறப்பு!!
1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு இன்று முதல் முழுநேரம் பள்ளிகள் திறப்பு!!

காரைக்காலில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் மார்ச் 4 ஆம் தேதி (இன்று முதல்) முழு நேரம் செயல்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிகள் முழுநேரம் செயல்படும்:

புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கடந்த 3 ஆம் தேதி முதல் முழுநேரமாக செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 101 பள்ளிகள் உள்ளன. அதில் புதுச்சேரி அரசு அறிவிப்பின்படி மார்ச் 3 ஆம் தேதி முதல் 71 பள்ளிகள் மட்டுமே தொடங்கி செயல்பட்டன.

TN Job “FB  Group” Join Now

அதில் குறிப்பாக அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் முழுநேர பள்ளிகள் தொடங்கவில்லை. நேற்றும் அந்த பள்ளிகள் அனைத்தும் அரை நேரம் மட்டுமே செயல்பட்டன. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “திறக்கப்படாத பள்ளிகளில் சமையலகம் தயாராகாத காரணத்தால் அரசு பள்ளிகள் அனைத்தும் நேற்று முழுநேரம் செயல்படவில்லை.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் 100% சதவிகிதம் தேர்ச்சி – அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!

எனவே இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அடுத்த வார இறுதியில் தொடங்கப்பட உள்ளதால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது மிகவும் முக்கியமாகும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!