ரேஷன் கார்டு பணிகள் நிறுத்தம் – குடிமைப் பொருள் வழங்கல் இயக்குனர் தகவல்!
காரைக்கால் பகுதியில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ரேஷன் கார்டு பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கார்டு:
நாட்டில் உள்ள பல்வேறு மாநில/யூனியன் பிரதேச பகுதிகளில் தற்போது கொரோனா நோய்பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் சில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மாநில/யூனியன் பிரதேச அரசுகள் தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேகொண்டு வருகிறது. மேலும் மக்களுக்கு நிவாரணமும் வழங்கி வருகிறது.
PF பணத்தை 3 நாட்களில் பெறும் எளிய வழிமுறைகள் இதோ!!
இந்நிலையில் காரைக்கால் பகுதியில் ரேஷன் கார்டு குறித்த அனைத்து பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை துணை இயக்குனர் சுபாஷ் அவர்கள் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, ரேஷன் கார்டு அனைத்து பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
TN Job “FB Group” Join Now
கொரோனா பொதுமுடக்கம் கால முடியும் வரை ரேஷன் கார்டு பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே ரேஷன் கார்டு தொடர்பான பணிகளுக்காக மக்கள் யாரும் அலுவலகத்தை நாட வேண்டாம் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முறையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Karen thank a lot of time to get the latest flash
Nice sir