கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021 – நாள் ஒன்றுக்கு ரூ.500/- ஊதியம் !
கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு (இ) நாகர்கோவில், பத்மனாபபுரம், குழித்துறை, இரணியல் மற்றும் பூதப்பாண்டி ஆகிய இடங்களில் இயங்கும் வட்ட சட்டப் பணிகள் குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களாக பணியாற்ற தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கபப்டுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 03.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் |
பணியின் பெயர் | தன்னார்வ தொண்டர்கள் |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்கும் தேதி | 03.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
வயது வரம்பு:
18 வயதுக்குமேற்பட்டவராக இருத்தல் வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
பள்ளி இறுதி வகுப்பில் (10ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவராகவும், விரைவாகப் புரிந்துணரும் திறன் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
TN Job “FB Group” Join Now
மதிப்பூதியம்:
வேலை பணிபுரியும் முழு நாள் ஒன்றுக்கு ரூபாய் ரூ.500/- மதிப்பூதியமாக வழங்கப்படும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் உள்ளவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை நிரப்பி தபாலிலோ அல்லது நேரிலோ கீழே கண்ட முகவரிக்கு 03.03.2021 தேதியன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ அன்று மாலை 5.30 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு கிடைக்கப் பெறுமாறு அனுப்பக் கோரப்படுகிறது.
முகவரி:
உயர்திரு. தலைவர் அவர்கள்,
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு,
மாவட்ட நீதிமன்ற வளாகம்,
நாகர்கோவில் – 629 001.
கன்னியாகுமரி மாவட்டம்.