13 சாலைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு – கொரோனா பரவல் எதிரொலி!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள காரணத்தால் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சாலைகள் அடைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கியது. இதனால் முழுஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவினால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் போன்ற அனைத்தும் மூடப்பட்டிருந்தது. பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள் – கல்வி அலுவலர் சுற்றறிக்கை!!
இரண்டாம் அலை:
முதல் பரவலின் அலை 2020ம் ஆண்டு இறுதியில் இருந்து சற்று குறைந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. மக்களும் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பத் தொடங்கினார்கள். இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை 2021 மார்ச் மாதத்தில் இருந்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சாலைகள் மூடல்:
அரசு கட்டுப்பாடுகளை தீவிரமாக செயல்படுத்தி வந்த போதிலும், நோய்த்தொற்றின் பரவலை கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்புகள் தமிழகத்தில் பரவி உள்ளது. தற்போது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் களியக்காவிளை மார்க்கெட் ரோடு, பனங்காலை ரோடு, குளப்புறம் கடுவாக்குழி ரோடு போன்ற 13 சாலைகளை மூடியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்