கொரோனா காரணமாக கன்வர் யாத்திரை ரத்து – மாநில அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக கன்வர் யாத்திரையை ரத்து செய்ய உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கன்வர் யாத்திரை:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் வழிபாட்டுதலங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ‘கன்வர் யாத்திரை’ நடைபெறும்.
தமிழை அவமானப்படுத்தும் மதுவிடம் சவால் விடும் கோதை – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசொட்!
இந்த யாத்திரையில் சிவ பக்தர்கள் கலந்து கொள்வார்கள் அவர்களை ‘கன்வாரியாக்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். யாத்திரையின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார், கவுமுக், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்று கங்கை நீரை எடுத்து செல்வார்கள். அந்த கங்கை நீரை, தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோயில்களுக்கு கொண்டு சென்று, சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்வார்கள்.
TN Job “FB Group” Join Now
பிரசித்தி பெற்ற இந்த யாத்திரை கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து உத்தரகாண்ட் மாநில அரசு ஆலோசனை நடத்தி வந்த நிலையில், அம்மாநில முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கன்வர் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து காவல்துறை அனுமதியுடன் லாரிகளில் கங்கை நீரை எடுக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.