சினிமாவை மிஞ்சும் ‘கண்ணான கண்ணே’ மீராவின் உண்மை ஸ்டோரி – விடாமுயற்சி தந்த வெற்றி!
சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் நாயகி மீராவின் நிஜவாழ்க்கையில் பல தோல்விகளையும் கண்டு துவண்டு விடாமல் அடைந்த வெற்றிகளை குறித்து இந்த பதிவில் காண்போம்.
கண்ணான கண்ணே:
வெள்ளித்திரையில் உள்ள நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே முன்னொரு காலத்தில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் தற்போதைய கால கட்டத்தில் சினிமா நடிகர்களை விட அதிக புகழை சம்பாதிக்கும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் உள்ளனர். அதிக புகழ் மற்றும் ரசிகர்கள் உடையவர்களுக்கு என்று தனியாக பல ஆர்மிகள் உள்ளது. சமூக வலைத்தளங்களில் இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் அதிக ரசிகர்கள் மற்றும் புகழை அடைந்த நடிகைகளில் ஒருவர் கண்ணான கண்ணே சீரியல் மீரா.
தமிழக தனியார் பள்ளி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா அறிகுறி – பெற்றோர்கள் அச்சம்!
சன்டிவியில் ஹிட் சீரியல் வரிசையில் ரோஜா விற்கு அடுத்த இடத்தில உள்ளது கண்ணான கண்ணே சீரியல். இதில் மற்ற கதைகளில் இருந்து மாறுபட்ட கதையம்சம் உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவு பெருகி வருகிறது. சீரியலின் நாயகி மற்றும் நாயகன் வேடத்தில் யுவா- மீரா நடிக்கின்றனர். மீராவின் அப்பாவாக பிருத்விராஜ் நடிக்கிறார். அப்பா மற்றும் மகளுக்கு இடையில் உள்ள பாச போராட்டத்தை மையமாக வைத்து கதை நகர்கிறது. மீரா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை நிமிஷிகா. இவர் ஆந்திரா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர். படிப்பிற்காக கோவைக்கு வந்தவர், அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
அக்.17ம் தேதி புதிய IPL அணிகளுக்கான ஏலம் – பிசிசிஐ அறிக்கை!
அதிலிருந்து சின்னத்திரை வாய்ப்பு கிடைத்து இந்த சீரியலுக்கு முன்னதாக இரண்டு பெரிய சேனல்களில் நடித்துள்ளார். ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக அந்த தொடர்கள் பாதியில் கைவிடப்பட்டு இவரை கைவிட்டுள்ளது. மேலும், விஜய்டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நீலாம்பரி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். எந்த சீரியலிலும் இவருக்கு இவ்வளவு புகழ் மற்றும் பாராட்டுக்கள் கிடைக்கவில்லை. மாடலிங்கிலும் தனது திறமையை நிமிஷா வெளிப்படுத்தி வருகிறார். ஆரம்பத்தில் குடும்பத்தினரும் இவருக்கு ஆதரவு அளிக்காமல் இருந்துள்ளனர். பின்னர், இவரின் திறமையை உணர்ந்து தற்போது பாராட்டி வருகின்றனர்.