மீராவின் அப்பா கையில் கிடைக்கும் சிசிடிவி பதிவு – இன்றைய “கண்ணான கண்ணே” ப்ரோமோ!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “கண்ணான கண்ணே” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
“கண்ணான கண்ணே” சீரியல்
சன் தொலைக்காட்சியில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்து வரும் சீரியல் தான், “கண்ணான கண்ணே”. இந்த சீரியலின் கதாநாயகியான மீரா சிறு வயதில் இருந்து தனது தந்தையின் பாசத்திற்காக ஏங்குகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கதாநாயகனான யுவாவை காதலிக்கிறார். ஆனால், அவரது அப்பா மீராவின் தங்கையான ப்ரீத்திக்கு திருமணம் செய்து வைக்க பேசுகிறார். இதனை தெரிந்து கொள்ளும் மீரா தனது காதலை தனது தந்தையின் ஆசைக்காக விட்டு கொடுத்து விடுகிறார்.
அஞ்சல் நிலையத்தில் காப்பீடு முகவர் பணி – குவிந்த பட்டதாரிகள் ஏமாற்றம்!
ஆனால், கடைசி நேரத்தில் ப்ரீத்தி தன்னால் யுவாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி விடுகிறார். இதனால் மீரா மற்றும் யுவா இருவருக்கும் திருமணம் நடைபெற்று விடுகிறது. இதனால் மீராவின் அப்பா மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறார். அதனால் விஷம் அருந்தி விடுகிறார். இதனை அறிந்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். அதே போல் தற்போது எந்த ஒரு அதிர்ச்சி அளிக்கும் விஷயத்தையும் அவரிடம் கூறக்கூடாது என்று டாக்டர்கள் கூறி விடுவதால், யுவா மற்றும் மீரா இருவரது திருமணத்தின் போது நடந்த குளறுபடியை கூறாமல் ரகசியம் காத்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இப்படியாக இருக்க, தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் யுவா மற்றும் மீரா இருவரது திருமணத்தின் போது அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும் சிசிடிவி பதிவுகள் இருக்கும் கேசட் மீராவின் அப்பாவிற்கு கிடைத்து விடுகிறது. இதனால் பதட்டம் அடைந்து விடும் மீரா, அதனை தனது தந்தை பார்க்க கூடாது என்றும் அதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்றும் யுவாவிடம் கூறுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிந்து விடுகிறது.