உயிர்பிழைத்து மீண்டும் வந்த யுவா? மீராவை அடைவாரா? – கண்ணான கண்ணே சீரியல் அதிரடி திருப்பம்!
சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியலில் யுவா இறந்து விட்டதாக அனைவரும் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், மீண்டும் அவர் உயிருடன் வர இருக்கிறார். இதற்கான திருப்பங்கள் நிறைந்த எபிசோடுகள் அடுத்து வர உள்ளது.
கண்ணான கண்ணே:
சன் டிவியின் பகல் நேர தொடர்களில் அதிக ரசிகர்களை கொண்ட தொடராக இருப்பது கண்ணான கண்ணே சீரியல் தான். அப்பா – மகள் இடையிலான பாச போராட்டத்துடன் ஆரம்பித்த இந்த தொடரில் மீரா தனது அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் மகளாக மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தனது காதல் மனைவி, குழந்தையை பிரசவிக்கும் நேரத்தில் உயிரிழந்த காரணத்தால், இந்த குழந்தை தான் தனது மனைவியின் உயிரிழப்பிற்கான காரணம் என்று நினைத்து அப்பா கதாபாத்திரம் மகளை வெறுத்து வந்தார்.
Follow our Instagram for more Latest Updates
ஆனால், அதே நேரத்தில் அப்பாவிடம் கிடைக்காத தந்தையின் பாசத்தை யுவா மீராவிற்கு அளவிற்கு அதிகமாக கொடுத்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். நாளடைவில் மீராவின் பாசத்தை அவரது அப்பாவும் புரிந்து கொள்ள தொடங்குகிறார். இந்நிலையில், யுவா இறந்து விடுவது போலவும், அவரது உடலை பள்ளத்தாக்கில் தேடித் கொண்டிருப்பது போலவும் கதை நகர்ந்து வந்தது.
Exams Daily Mobile App Download
ஆனால், ரசிகர்களை ஹாப்பியாக்கும் விதமாக யுவா மீண்டும் உயிருடன் வந்துள்ளார். கிஷோர் தான் யுவாவை கடத்தி வைத்துள்ளார். அவரிடம் இருந்து யுவா தப்பித்து வந்து மீராவை எப்போது சந்திப்பார்? என்று ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் எழுந்துள்ளது. இதனால் இனி வரும் எபிசோடுகளில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.