மதுரை காமராஜர் பல்கலை தேர்வு முடிவுகள் – மாணவர்கள் கோரிக்கை!!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி., எம்.பில்., படிப்புகளுக்கான நேர்முக தேர்வுகளில் பங்கேற்றவர்களுக்கான முடிவுகள் இன்னும் வெளியிடாமல் உள்ளதால் விரைவில் வெளியிட வேண்டும் என ஆய்வு மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி., எம்.பில்., படிப்புகளில் 2020-21 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வழங்க 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் 3000க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
TN Job “FB Group” Join Now
அதன் முடிவில் 2200 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணல் தேர்வு முடிவுகள் நாக் கமிட்டி ஆய்வு காரணமாக மார்ச் மாதம் வெளியிடப்பட உள்ள முடிவுகளில் கால தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது ஏப்ரல் மாதம் ஆன நிலையில் தேர்வு முடிவுகள் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அச்சம் – சொந்த ஊருக்கு படையெடுக்கும் தொழிலாளர்கள்!!
இதுகுறித்து காமராஜர் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆய்வு படிப்பு மாணவர்களுக்கான நேர்காணல் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடத்தப்படுவதால் நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடத்த முடிகிறது. இதனால் தேர்வு முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. தமிழ் கிறிஸ்தவ படிப்பில் 9 பேர் மட்டும் உள்ளனர். பிற பாடங்களில் குறைந்தது 250க்கும் மேற்பட்டோர் உள்ளனர். எனவே மார்ச் மாதம் முழுவதும் நேர்காணல் நடத்தப்பட்டது. விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்”, இவ்வாறு தெரிவித்தனர்.