காமராஜர் பல்கலை தொழில்நுட்ப துறை மூடல் – கொரோனா எதிரொலி!!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து உயிரி தொழில்நுட்ப துறை மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தாக்கத்தில் அதிகளவு மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மதுரையில் செயல்பட்டு வரும் காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்ப துறையில் பேராசிரியாராக பணியாற்றி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் பணியாற்றி வந்த உயிரி தொழில்நுட்ப துறை நேற்று (ஏப்ரல் 22) வியாழக்கிழமை மூடப்பட்டது.
TN Job “FB Group” Join Now
முன்னதாக கொரோனா தொற்று காரணமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. கல்லூரியில் புதிய மாணவர் சேர்க்கை, தேர்வு பணிகள் போன்றவற்றிற்கு மட்டும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பல்கலைக்கழக்தில் பேராசிரியராக பணியாற்றி வந்த ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக ரேஷன் கடைகளில் விடுமுறை நாள் மாற்றம் – மாவட்ட ஆட்சியர் தகவல்!!
பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மூடப்பட்ட உயிரி தொழில்நுட்ப துறையில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பேராசிரியருடன் பணியில் இருந்த மற்ற ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் உயிரி தொழில்நுட்ப துறை இன்னும் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டிருக்கும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.