கமல்பிரீத் கவுர் 7 வது இடத்துக்கு பின்னடைவு – மழை காரணமாக போட்டி ஒத்திவைப்பு !
ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ மாநகரில் தற்போது இந்தியாவின் கமல்பிரீத் கவுர் தற்போது வட்டு எறிதல் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவர் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்து வந்தார். தற்போது அங்கு மழை காரணமாக போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ போட்டிகள்
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு கொரோனா பரவலையும் கடந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது இந்திய நாட்டின் டிஸ்க்ஸ் வீராங்கனை கமல்பிரீத் கவுர் இந்த போட்டியில் முதல் பெண்ணாக இறுதி சுற்று வரை முன்னேறினார்.
தமிழகத்தில் ஆண்களுக்கு அதிகளவு பேருந்து கட்டணம் வசூல் – OPS அறிக்கை!
இதனால் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக தொடங்கிய இந்த போட்டியில் கமல்பிரீத் கவுர் வட்டு எரித்தலில் 61.62 மீட்டர் அளவில் எரிந்து உள்ளார். இதன் காரணமாக, கமல்பிரீத் கவுர் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார். பின்னர், இந்த போட்டியில் மூன்றாவது சுற்றினை சீனாவை சேர்ந்த சென் யாங் துவக்கி வைத்தார். ஆனால், அவர் விளையாடும் போது, மழையின் காரணமாக அவரால் சரியாக வட்டினை எரிய முடியவில்லை.
TN Job “FB Group” Join Now
இவரை தொடர்ந்து ஸ்பெயின் வீராங்கனையான லிலியானா விளையாடும் போதும் இதே போல் நிகழ்ந்து உள்ளது. இதன் காரணமாக தற்போது போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீராங்கனைகள் விளையாடும் இடத்தில் மழை நீர் தேங்கி உள்ளதால் அதனை தூய்மைபடுத்தும் பணிகளில் பணியாளர்கள் இறங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.