தமிழகத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் & அறிஞர்களுக்கு விருது – கமல்ஹாசன் கோரிக்கை!
தமிழகத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் விருது பெற விண்ணப்பிக்கும் நடைமுறையை மாற்ற வேண்டும். விருதுக்கு தகுதியானவர்களை கண்டறிய நடுவர் குழு அமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
விருது வழங்கும் முறை:
தமிழகத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் போன்றவர்களை பாராட்டும் வகையிலும், அடுத்த படைப்புகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறை சார்ந்த விருதுகளுக்கான அறிவுப்பும் வெளியிடப்பட்டு அதற்கான தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமோ அல்லது நேரடியாகவோ விருதுகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த முறை காலம் காலமாக நடைமுறையில் உள்ளது.
தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் சம்பளம் உயர்வு – பெண்கள் ஆர்வம்!
இந்த நிலையில் விண்ணப்பித்து பெறுவதற்கு பெயர் விருதல்ல என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகிறார். மேலும் விண்ணப்பித்து பெறக்கூடிய எந்த விருதும் தன் ஆளுமைக்கு இழுக்கு என்றே உண்மையான கலைஞன் எண்ணுவான். விருதுக்கு விண்ணப்பம் கேட்டால், நல்ல கலைஞர்கள் மெளனமாக நகர்ந்து விடுவார்கள். எனவே விருது பெற விண்ணப்பிக்கும் நடைமுறையை மாற்றம் செய்ய வேண்டும்.
TN Job “FB Group” Join Now
ஒவ்வொரு விருதும் வழங்க தகுதியானவர்களை கொண்டு நடுவர் குழு அமைக்கப்பட வேண்டும். தகுதிகளின் அடிப்படையில் இவ்விருது பெறும் நபர்களை தேர்ந்தெடுப்பது குழுவின் பொறுப்பாக இருக்க வேண்டும். முடிந்தவரை விருதுகளை அக்கலைஞன் வாழும் ஊரில் சென்று விழா நடத்தி வழங்க வேண்டும். நல்ல கலைஞர்களுக்கு விருதானது சிறந்த அங்கீகாரத்தை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். தமிழக முதல்வர் இதை பரிசீலிக்க வேண்டும். விண்ணப்பித்து விருது வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.