விதியை மீறிய நடிகர் கமல்ஹாசன் – தமிழக சுகாதாரத்துறை செயலாளர் கேள்வி!
கொரோனா காரணமாக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டன. கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்த ஒரு நபர் 7 நாட்கள் வரை தனிமையில் இருக்க வேண்டும். இதனை கமல்ஹாசன் மீறியதாக சுகாதாரத்துறைச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
விதியை மீறிய கமல்ஹாசன்
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றன. இதனால் பல்வேறு நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இதில் குறிப்பாக கொரோன 2 டோஸ் தடுப்பூசியை அனைவரும் முறையாக செலுத்தி கொள்ள வேண்டும். மேலும் கொரோனா அறிகுறிகள் ஏதும் ஏற்பட்டால் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மற்றும் கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்த நபர் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அத்துடன் அரசு அறிவிக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது.
சபரிமலை கோயில் பாதையில் மருத்துவ வசதி – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இதனை மீறியவர்கள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடுமையான சளி, இருமல் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் கடந்த சனிக்கிழமை (டிச.4) முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பினார். இதையடுத்து அன்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
இந்நிலையில், நடிகர் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து தகுந்த விளக்கம் கேட்கப்படும் என சுகாதாரத்துறைச் செயலாளர் கூறியுள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் கூறியதாவது, “கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்த நபர், 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் தற்போது இதனை மீறி உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து தகுந்த விளக்கம் கேட்கப்படும்” என கூறியுள்ளார்.