கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற பெற்றோர் சம்மதம் – முக்கிய அறிவிப்பு!
சின்னசேலம் கனியாமூர் பள்ளி மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டதற்கான விவரம் குறித்த நோட்டீஸை விருத்தாசலம் அருகே பெரிய நெசலூரில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் அதிகாரிகள் ஒட்டினர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாளியுள்ளன.
பெற்றோர் சம்மதம் என தகவல்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவி கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் கூறிய நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார், 3 அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஓய்வுபெற்ற தடயவியல் துறை அதிகாரி ஒருவர் உட்பட 4 பேர் கொண்ட குழுவை நியமித்து, மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று முன்தினம் மாணவியின் உடல், மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இந்த மறு உடற்கூறாய்வில் அரசு மருத்துவர்களுடன், மாணவியின் தந்தை மற்றும் அவர் தரப்பு வழக்கறிஞர் இருக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. ஆனால், மாணவியின் தந்தை மறு உடற்கூறாய்வின்போது பங்கேற்கவில்லை. அந்த நேரத்தில் மாணவியின் தந்தை மற்றும் வழக்கறிஞர் உள்ளிட்ட குடும்பத்தினர் வந்தால் அவர்களை அனுமதிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – புதிய கட்டுபாடுகள் அமல்! நிபுணர்கள் அறிவுரை!
இதையடுத்து, மறு உடற்கூறாய்வு முடிந்த நிலையில், மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரின் வீட்டின் முன் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். நோட்டீசை பெற்றுக்கொள்ள மாணவியின் பெற்றோர் இல்லாததால் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது “உங்கள் மகள் உடல் மறு பிரேத பரிசோதனை முடிந்து விட்டது, வந்து உடலை பெற்றுக் கொள்ளுங்கள்” என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி உடலை இன்று மதியம் 2 மணிக்குள் பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உடலை பெற்று இன்றே மாணவிக்கு இறுதிச்சடங்கு நடத்த பெற்றோர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.