கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் – புதிய எஸ்பி விளக்கம்!

0
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் - புதிய எஸ்பி விளக்கம்!
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் - புதிய எஸ்பி விளக்கம்!கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் - புதிய எஸ்பி விளக்கம்!
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் – புதிய எஸ்பி விளக்கம்!

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்பி பகலவன் தற்கொலை விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

தற்கொலை விவகாரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மாணவியின் மரணத்திற்கு என்ன தான் காரணம் என்பது சூழ்ச்சியாகவே இருந்து வருகிறது. ஆனால், பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் தான் என் மகள் தற்கொலை செய்துகொண்டதிற்கு காரணம் என பெற்றோர்கள் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வரைக்கும் போலீசார் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download

இதனிடையே, போராட்டக்காரர்கள் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கேட்டு கலவரத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். அதாவது, பள்ளி பேருந்துகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி எரித்து மிகவும் சேதப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தற்போது அந்த பள்ளியில் படித்து வரும் 4500 மாணவர்களின் மாற்று சான்றிதழ்களையும் எரித்து சாம்பலாகியுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மரணமடைந்த மாணவியின் உடலை 4 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மறு உடற்கூராய்வு செய்தனர்.

TNPSC Group 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?

இந்நிலையில், மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, மாணவி தற்கொலை செய்துகொண்ட பகுதி, மற்றும் வகுப்பறைகள் அனைத்தையும் கண்காணித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்பி பகலவன் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேசியுள்ளார். அதாவது, கலவர வழக்கு தொடர்பான விசாரணை குழுவுக்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு கொடுக்கும் எனவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழையபடி அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!