கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த கலவரம் – டிஜிபி சைலேந்திர பாபு புதிய உத்தரவு!

0
கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த கலவரம் - டிஜிபி சைலேந்திர பாபு புதிய உத்தரவு!
கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த கலவரம் - டிஜிபி சைலேந்திர பாபு புதிய உத்தரவு!
கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த கலவரம் – டிஜிபி சைலேந்திர பாபு புதிய உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவிக்கு நியாயம் வேண்டும் என பெரிய கலவரம் வந்தது. இந்நிலையில் அது குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி வன்முறை:

கடந்த சில நாட்களாக தமிழகத்தை உலுக்கி வரும் செய்தி தான் கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை சம்பவம். ஜூன் மாதம் 13 ஆம் தேதி காலை தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டிய நிலையில், பள்ளி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் சரியான விளக்கம் கொடுக்காததால் கள்ளக்குறிச்சி பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினார்கள்.

EPFO கணக்கில் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள் – கூடுதல் வருமானம் தரவிருக்கும் திட்டம்!

அதில் 15க்கு மேற்பட்ட பள்ளி வாகனங்கள், பள்ளி வளாகங்கள், மாணவர்களின் சான்றிதழ் என அனைத்தும் தீக்கறையானது. அது மட்டுமில்லாமல் இந்த வன்முறை சம்பவத்தில் பல போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின் போராட்டக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். மேலும் பலர் இந்த போராட்டத்தில் கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வன்முறை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

அதன் படி கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புலனாய்வு குழுவில் குற்றப்பிரிவு எஸ்பி கின்சிலின், விழுப்புரம் தலைமையக கூடுதல் எஸ்பி திருமால், திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் எஸ்பி முத்து மாணிக்கம் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மூலமாக கள்ளக்குறிச்சி கலவரம் பற்றியே விசாரணை செய்யப்பட இருப்பதாகவும், வாட்ஸ்ஆப் குழுக்கள், யூடுயூப் சேனல்களை ஆய்வு செய்து எப்படி இவ்வளவு கூட்டம் வந்தது என ஆய்வு நடத்தப்பட இருக்கிறது. மேலும் தவறான செய்திகளை பரப்பிய யூடுயூப் சேனலைகளை முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த விசாரணையில் இந்த கலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!