கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவர விவகாரம் – எஸ்பி நேரில் ஆய்வு!

0
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவர விவகாரம் - எஸ்பி நேரில் ஆய்வு!
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவர விவகாரம் - எஸ்பி நேரில் ஆய்வு!
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவர விவகாரம் – எஸ்பி நேரில் ஆய்வு!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளியில் 2 மாவட்ட எஸ்பிக்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

நேரில் ஆய்வு:

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த கனியாமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில் மாணவி மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த காரணத்தை ஏற்க மறுத்த மாணவியின் உறவினர்களும், பொதுமக்களும் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் தற்போது கலவரமாக மாறியுள்ளது. அங்கு போராட்டக்காரர்கள் பள்ளி பேருந்தை தீ வைத்தும் பொருட்களை அடித்து நொறுக்கியும் சேதப்படுத்தி வருகின்றனர். மேலும் பள்ளி அலுவலகத்தில் உள்ள அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களும் தீயில் கருகி எரிந்தது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் கலவரம் நடைபெறும் பள்ளி மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவலர்கள் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அப்பள்ளியில் பயின்ற மற்ற மாணவிகளின் கல்வி நிலை கேள்விக்குறியாக உள்ளது. தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு மகளின் சடலத்தை தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்று மாணவியின் தந்தை மேல் முறையீடு செய்ததை அடுத்து மறு உடற்கூராய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை விசாரணை தீவிரம் – எஸ்.பி. பகலவன் பேட்டி!

மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவும் உத்தரவிட்டது. தற்போது உடல் 2 ம் கட்ட பிரேத பரிசோதனை நடந்து முடிந்து மாணவியின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கலவரம் நடைபெற்ற தனியார் பள்ளியில் கள்ளக்குறிச்சி எஸ் பி பகலவன், திருவண்ணாமலை எஸ் பி கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!