கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு – முறையான லைசென்ஸ் பெறாத விடுதி!

0
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு - முறையான லைசென்ஸ் பெறாத விடுதி!
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு - முறையான லைசென்ஸ் பெறாத விடுதி!
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு – முறையான லைசென்ஸ் பெறாத விடுதி!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி பள்ளியிலேயே உயிரிழந்துள்ளார். அந்த மாணவி அப்பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவ்விடுதி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

பள்ளி விடுதி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் கடந்த 13ம் தேதி ஸ்ரீமதி எனும் மாணவி திடீரென உயிரிழந்துள்ளார். அவர் பள்ளியின் மூன்றாம் தளத்தில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் பிரேத பரிசோதனை செய்ததில் மாணவியின் உடலில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த மாணவிக்கு நீதி கேட்டு பொதுமக்களும் மாணவர் அமைப்பினரும் தொடர்ந்து ஒருவாரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பள்ளியை தீ வைத்து எரிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் முக்கிய ஆதாரங்களை தேடும் பணியில் இறங்கியுள்ளனர். இதில் இறந்து போன மாணவி பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்ததாக பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் கூறினார். இது குறித்து விசாரணை செய்ததில் அந்த விடுதிக்கு அரசு அனுமதி இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதாவது பள்ளி வளாகத்தில் இயங்கும் விடுதிக்கு உரிமம் இல்லை என்று தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வீடுகளில் மின்சார மீட்டருக்கு மாதம் ரூ.60 வாடகை – மின்சார வாரியம் புதிய திட்டம்!

இந்த விடுதியில் 24 மாணவிகள் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பள்ளியின் 3வது மாடியில் உள்ள விடுதியும் பள்ளி வளாகத்திற்கு பின்னால் அமைந்துள்ள மற்றொரு விடுதியும் குறிவைத்து எரிக்கப்பட்டுள்ளது. அதனால் சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடைபெற்று வருகிறது. அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்த குழுவினர் விடுதியை நடத்த தேவையான உரிமத்தை நிர்வாகம் வாங்கவில்லை என்பதை உறுதி செய்தனர். அம்மாவட்ட ஆட்சியர் பெண்களுக்கான தங்கும் விடுதிகள் நடத்துவோர், உரிய உரிமம் பெற வேண்டும் என்று மூன்று மாதங்களுக்கு முன், நாளிதழ்களில், விளம்பரம் செய்திருந்தார். இந்த நிலையிலும் கூட பள்ளி அதற்கு விண்ணப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!