கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் – குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை!
கடந்த சில நாட்களாக தமிழகத்தை உலுக்கி வரும் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீநிதியின் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வருகிற ஜூலை 27 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி சம்பவம்:
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் செயல்பட்டு வந்த சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீநிதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் கடந்த சில நாட்களாக தமிழக மக்களை பெரும் சோகத்தில் வைத்துள்ளது. மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இறப்பதற்கு முன்னதாக மாணவி வகுப்பறையில் இருந்த சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டன.
Exams Daily Mobile App Download
மேலும் மாணவிக்கு நீதி கேட்டு கடந்த 17 ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் இறுதியில் வன்முறையில் முடிந்தது, வன்முறைக்கு யார் காரணம் என ஒரு பக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவி இறந்த இடத்திற்கு சென்று சிபிசிஐடி சோதனை செய்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் மாணவியின் உருவ பொம்மையை மேலே இருந்து போட்டு விசாரணை நடத்தினார்கள்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம் – பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை!
இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இன்று (ஜூலை 21) நேரில் விசாரணை நடத்த உள்ளது. அதில் ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி மற்றும் உறுப்பினர்கள் நேரில் சென்று விசாரணை நடத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் வருகிற 27 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.