கள்ளக்குறிச்சி விவகாரம்: ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை ஆய்வு முடிவு – முக்கிய அறிக்கை தாக்கல்!

0
கள்ளக்குறிச்சி விவகாரம்: ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை ஆய்வு முடிவு - முக்கிய அறிக்கை தாக்கல்!
கள்ளக்குறிச்சி விவகாரம்: ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை ஆய்வு முடிவு – முக்கிய அறிக்கை தாக்கல்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி விடுதியில் உயிரிழந்த ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளும் ஆய்வுக்காக ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகள் குறித்த ஆய்வு தொடர்பான அறிக்கையை ஜிப்மர் மருத்துவக் குழுவினர் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆய்வு நிறைவு :

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ஆம் தேதி பள்ளியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், பள்ளியைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதனால் மாணவி இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யும் படி உத்தரவிட்டார். மேலும் பிரேத பரிசோதனையின் போது 3 மருத்துவ நிபுணர்களும் உடன் இருந்த நிலையில் அதனை பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே மாணவியின் உடல், மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. அவரது உடலை பெற்றுக் கொள்ளுமாறு வீட்டில் கடந்த 19ம் தேதி வருவாய்த்துறை மூலம் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர்.

5 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு காத்திருக்கும் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

இதைத்தொடர்ந்து மாணவியின் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும், அதன் வீடியோக்களையும் 3 மருத்துவர்கள் கொண்ட ஜிப்மர் மருத்துவக் குழு மற்றும் தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் பேரில், மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் வீடியோக்களையும் சிபிசிஐடி போலீசார் ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழு செய்த ஆய்வு நிறைவு பெற்றது. மேலும் இன்று அல்லது நாளை விழுப்புரம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து மாணவியின் மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!