அன்னையர் தினத்தில் மகன் போட்டோவை முதல் முறையாக வெளியிட்ட காஜல் – வைரலாகும் போட்டோ!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். அன்னையர் தினமான இன்று தன் மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் போட்டோ:
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லுவைத் திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். திருமணம் முடிந்தாலும் தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்துவேன் என்று காஜல் அகர்வால் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அமீரும் பாவனியும் திருமணம் செய்துகொள்ள போகிறார்களா? பிரியங்கா கூறிய அதிர்ச்சி தகவல்!
சில மாதங்களுக்கு முன்பு காஜல்,தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். அதனால் தான் மற்ற படங்களில் கமிட் ஆக முடியவில்லை என்று கூறினார். கர்ப்பமாக இருப்பதால் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட காஜலை சிலர் உருவ கேலி செய்த சம்பவமும் சமீபத்தில் நடந்தது. இதற்கு சமூக வலைத்தளம் வாயிலாக காஜல் பதிலடி கொடுத்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடிகை காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.
காதலர் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் கடந்த மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு நீல் கிட்ச்லு என்று பெயர் வைத்துள்ளனர். நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்ததை அறிந்த ரசிகர்கள், அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதுவரை குழந்தை போட்டோவை வெளியிடாமல் இருந்த நிலையில் தற்போது அன்னையர் தினமான இன்று தன் மகனின் புகைப்படத்தை முதல் முறையாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.