தன்னால் குடும்பம் இரெண்டாகி விட்டதாக புலம்பும் கதிர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ட்விஸ்ட்!
கதிரும் முல்லையும் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றதால் தான் மூர்த்திக்கும் நெஞ்சுவலி வந்து விடுகிறது. தற்போது குடும்பமே இரண்டாக பிரிந்து அல்லல்பட்டு கொண்டிருப்பதை பார்த்து தன்னால் குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறது என புலம்பும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்தி குணமாகி வீட்டிற்கு வருவாரா எனவும், கதிர் பழையபடி குடும்பத்தினருடன் சேர்ந்து விடுவாரா எனவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும்கூட கதிர் தான் விட்ட சவாலில் உறுதியாக இருக்கிறார். அதாவது முல்லையின் செயற்கைமுறை கருவுறுத்தலுக்காக செலவு செய்த ஐந்து லட்ச ரூபாயை திருப்பிக் கொடுக்கும் வரைக்கும் அந்த வீட்டு வாசப்படியை கூட மிதிக்கக்கூடாது என வீராப்பு பேசிக் கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
கதிரை நினைத்து மீண்டும் மூர்த்தி படுத்த படுக்கையாகி விடுவாரோ என குடும்பத்தினர்கள் மிகவும் பயந்து கொண்டிருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் மூர்த்தியின் செலவுக்கு தற்போதைக்கு இரண்டு லட்சம் வரைக்கும் செலவாகி இருக்கிறது. இந்த இரண்டு லட்ச ரூபாயையும் நானே தருகிறேன் என ஜனார்த்தனனிடம் கதிர் சவால் விட்டிருக்கிறார். எப்படி கதிர் 7 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மூர்த்தியின் நிலைமையைப் பார்த்தால் தற்போதைக்கு கடைக்கு செல்ல வாய்ப்பே இல்லை.
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 17 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
இதனால் தற்போதைக்கு சூப்பர் மார்க்கெட்டை ஜீவா தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜீவா சூப்பர் மார்க்கெட்டை கவனித்துக் கொண்டால் எப்படியும் ஜனார்த்தனன் சும்மா இருக்க மாட்டார். ஜீவாவை தன் வழிக்கு கொண்டுவர அவ்வப்போது ஏதேனும் சூழ்ச்சி வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கப் போகிறார். கதிர் வீட்டை விட்டு கிளம்பியதால் குடும்பமே இரண்டாக பிரிந்து கஷ்டப்பட போகிறது. நான் ஒருவன் எடுத்த முடிவால் வீட்டில் இவ்வளவு பெரிய குழப்பம் ஏற்பட்டு விட்டதே என கதிர் புலம்பும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.