மூர்த்திக்கான மருத்துவ செலவினை பார்த்து கொள்வதாக கூறும் கதிர் – ப்ரோமோ ரிலீஸ்!

0
மூர்த்திக்கான மருத்துவ செலவினை பார்த்து கொள்வதாக கூறும் கதிர் - ப்ரோமோ ரிலீஸ்!
மூர்த்திக்கான மருத்துவ செலவினை பார்த்து கொள்வதாக கூறும் கதிர் - ப்ரோமோ ரிலீஸ்!
மூர்த்திக்கான மருத்துவ செலவினை பார்த்து கொள்வதாக கூறும் கதிர் – ப்ரோமோ ரிலீஸ்!

மூர்த்தியின் அறுவை சிகிச்சைக்கான இரண்டு லட்ச ரூபாய் பணத்தை ஜனார்த்தனன் தான் கொடுக்கிறார். தற்போது ஜனார்த்தனனிடம் அந்த இரண்டு லட்ச ரூபாய் பணத்தையும் நானே உங்களுக்கு தருகிறேன் என கதிர் சவால் விடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்தி குணமாகி வீட்டிற்கு வருவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மூர்த்திக்கு இதயத்தின் பக்கத்தில் 2-பிளாக் இருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். சிகிச்சைக்கு தேவையான இரண்டு லட்சத்தை உடனடியாக மருத்துவமனையில் செலுத்தி விடுங்கள். எவ்வளவு சீக்கிரமாக பணம் செலுத்துகிறார்களோ அவ்வளவு சீக்கிரமாக மூர்த்தியின் உயிரை காப்பாற்ற முடியும் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Exams Daily Mobile App Download

ஏற்கனவே முல்லையின் சிகிச்சைக்காக 5 லட்சம் வரைக்கும் குடும்பத்தினர்கள் கடன் வாங்கியிருக்கிறார்கள். தற்போது மீண்டும் இந்த இரண்டு லட்ச ரூபாய் பணத்திற்கும் எங்கு செல்வது என குடும்பத்தினர்கள் அனைவரும் திண்டாடிக் கொண்டிருகின்றனர். இந்த சமயத்தில் மீனாவின் அப்பா ஜனார்த்தனன் இரண்டு லட்சத்தை தருகிறேன் என்று கூறுகிறார். கதிரும் முல்லையும் வீட்டை விட்டு சென்றதற்கும், குடும்பம் இரண்டாகப் பிரிந்ததிற்கும் ஜனார்த்தனன் தான் முழுக்க முழுக்க காரணம்.

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா வீட்டில் நடந்த சுப நிகழ்வு – வெளியான புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

இருந்தாலும் தற்போதைக்கு மூர்த்தியின் உயிரை காப்பாற்றியாக வேண்டும் என்பதால் அந்த இரண்டு லட்ச ரூபாய் பணத்தையும் ஜனார்த்தனனிடமிருந்து குடும்பத்தினர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். இரண்டு லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு இதற்கு மேலும் என்ன பிரச்சனை செய்ய காத்திருக்கிறாரோ என கதிர் நினைக்கிறார். சிகிச்சைக்கு தேவைப்பட்ட 2 லட்சத்தை உங்களுக்கு நான் தந்து விடுவேன் என கதிர் உத்திரவாதம் அளிக்கும் படியான புரோமோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே கதிர் ஐந்து லட்சத்தை கொடுத்து விடுவேன் எனக் கூறிவிட்டு தான் வீட்டை விட்டு கிளம்பினார். தற்போதும் இரண்டு லட்சத்தை தருகிறேன் என கூறுகிறார். எப்படி 7 லட்சத்தை குடும்பத்தினருக்கு தரப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!